ஏழைத்தாய் ..!


கண்களை விட்டு அகல மறுக்கிறது ..

ரோட்டோரமாய் கைநீட்டி

வயிறு கழுவும்

ஏழைத்தாயின்

வற்றிய மார்பில்

உதடுகுவித்து பால் தேடிய

பிஞ்சுக் குழந்தையின்

ஏக்கப்பார்வை ....!

தாய் வயிற்றில் இருந்தால்தான்

தன் வயிற்றுக்கு உணவு என்று

எப்படித்தெரியும்

அந்த பிஞ்சுக்கு ....!

-----விவேகப்ரசன்னா .
blog comments powered by Disqus