நல்லவை மட்டும் .


இந்த தளத்தின் மூலம் நான் பகிர விரும்புவது ,நமது முன்னேற்றம் சார்ந்த விஷயங்கள் தான் .நமக்கு உதவும் ,உதவிய ,உதவப்போகிற மனிதர்கள் .உயிரினங்கள் ,அனைவருக்கும் நன்றி பாராட்டும் விதமாக இந்த தளத்தை நான் வடிவமைக்க விரும்புகிறேன் .

இந்தியாவைப் பொறுத்தவரை நாம் இன்னும் இணையத்தை பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை .அதற்க்கு உதவும் வகையில் பல தமிழ் தளங்கள் இருக்கின்றன இருந்தாலும் இன்னும் இன்னும் வளர வேண்டும் என்பதே எனது ஆசை .


தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை ,கதைகள் ,கவிதைகள் ,பயனுள்ள தளங்களின் அறிமுகங்கள் ,என எனக்கு தெரிந்ததை ,நான் பார்த்ததை,நான் கேள்விப்பட்டதை எல்லாம் (உங்களுக்கு நிச்சயம் பயன்படக்கூடியதை மட்டும் ) எழுத இந்த தளத்தை நான் பயன்படுத்த போகிறேன் .தமிழ் மூலம் நாம் மிக எளிதாக இணையத்தை அதன் பயன்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டும் ,அதற்க்கு இந்த தளம் ஒரு சிறிய அளவிலாவது உபயோகப்பட்டால் மகிழ்வேன் .நன்றி .
blog comments powered by Disqus