
மறைத்து நிற்பினும்
தள்ளிவிட்டு வெளித்தோன்றும் ....சூரியன் ..!
எத்துனை வழிமுறைகள் பின்பற்றினும்
ஏதேனும் வழியில் குருதி தேடிவரும் ..கொசுக்கள் இனம் ...!
எத்துனை வாசனை திரவியங்கள் தெளித்தாலும்
மீறி நாசியில் நுழையும் ..சாக்கடை நாற்றம் ...!
எத்துனை பாதுகாப்பு வைத்தியம் பார்ப்பினும்
மீறி நேரம் பார்த்து வெளியேறும் ...உடலிலிருந்து உயிர் ...!
வாசல் கதவும் ஜன்னல்களும் இறுக அடைத்திருப்பினும்
இடுக்கு தேடி உள் நுழையும் ...காற்று ...!
இடியும் மின்னலும் பார்வையை மறைப்பினும்
அழகாய் முகம் காட்டும் ...வானவில் ...!
அழுந்த கண்மூடி அமர்ந்திருப்பினும்
அடிகண்ணிலிருந்து ஆட்டம் காட்டும் ...ஓர் உருவம் ...!
இதையெல்லாம் போலத்தான்
இறுக மூடியிருந்த என் மனக்கதவை
அடித்து நொறுக்கி உள் புகுந்தது ....காதல் சனியன் ..!
.......................................................விவேகபிரசன்னா .............................